Wednesday, 19 December 2012
Friday, 30 November 2012
Thursday, 22 November 2012
ஏக்கம் ....!!
இறைவனிடம் பாசத்தை கேட்டேன்
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான்
பாசத்தை கடைசி வரைக்கும் அனுபவிக்க
உன்னை காதலித்தேன் அதை
உன்னிடம் மறைத்து வைத்தேன்
காதல் கவிதை எல்லாம் தனியே
புலம்பி வைத்தேன் கனவின் தொல்லை
என்று உறக்கத்தை விட்டேன்
நாளை உன்னை பார்க்க துடிக்கும்
என் மனதின் வேதனை அறியாமல்
இரவு இரவெல்லாம் விடியாமல்
நீண்டுகொண்டே இருக்கிறது....!?
Thursday, 4 October 2012
Tuesday, 2 October 2012
Wednesday, 26 September 2012
Wednesday, 5 September 2012
Tuesday, 21 August 2012
Monday, 20 August 2012
Sunday, 29 July 2012
ரமலான் என்னும் விருந்தாளி ...!!!!!
வருடத்தில் ஒரு முறை நம்மை தேடி வரும் விருந்தாளி ....!
நம்மை நேர் வழிக்கு கொண்டு செல்ல வந்த விருந்தாளி ....!
விருந்தாளி என்னும் ரமலான் மாதம் வந்ததும் 
சொர்கத்தின் வாசல் திறக்கப்படும் ....!
நரகத்தின் வாசல் மூடப்படும்....! 
ஷைத்தான்கள் விலகப்படும்.....! 
ரமலான் மாதம்  ஒவ்வொரு இரவிலும் 
பகலிலும் நரகத்தில் உள்ளவர்களுக்கு 
விடுதலை அளிக்கப்படும் ...!
இத்தகைய விருந்தாளி நம்மை தேடி வரும் ரமலானை 
அன்போடும் மகிழ்வோடும் வரவேற்போம்....!!! 
அல்லாஹ்வின் வழிமுறைப்படி நோம்பு நோற்று 
எல்லாம் வல்ல இறைவனின் அருளினை பெறுவோம் ..!!!!
Saturday, 28 July 2012
கனவாகி போகுமோ என் வாழ்கை ....
என் இதயம் உன்னை தேடும் பொழுது
நீ என்னுடுடன் இல்லை
என் நினைவு உன்னை தேடும் பொழுது
மட்டும் என்ன்டுடன் இருக்கிறாய்
என் தூக்கம் உன் கனவோடு
என் பயணம் உன் நினைவோடு
என் கவிதை உன் கற்பனையோடு
கற்பனையில் உன்னுடன் அனுதினமும்
வாழ்வதால் நீ என்னுடன் இருந்த நேரங்கள்
யாவும் கற்பனையாகவே தோன்றுகிறது
கற்பனையில் வாழ்கின்ற என் வாழ்கை
கடைசிவரைக்கும் கனவாகி போகுமோ ....
Tuesday, 26 June 2012
அன்புள்ள அன்னையே..
உன் புகழ் பாடிடுவேன் இங்கு நானம்மா
கடவுளின் ஆணைப்படி ( 14 .06 ) என் பிறந்தநாள்
அன்று நான் உன் கையில்...
வாழ்கை வாழ காரணமாக இருந்தவள்
இன்று நான் உயிரில் கலந்த என் உயிர் அன்னை உன் நெஞ்சில் ..
பிறந்தால் இறந்து விடுவேன் என்று தெரிந்தும் பிறந்தேன்
கடவுளை காண நினைத்து உன் கருவறையில் ...
என்னை கருவில் சுமந்த அன்னையே ...
எனக்கு சுவாசம் தந்த அன்னையே....
உன் அறியா வயதில் உன் முதற் பிள்ளையாய்
என்னைச் சுமந்து பெற்றாயே உன் வலி நானறிவேன் ..
உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்
காலமெல்லாம் காத்திடுவேன் உன்னை .
என் இதயத்தில் நிறைந்திருக்கின்ற உன்னை..
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் ....
நீயும் ...!!! நானும் !!!!
உனக்காய் காத்திருக்கேன் விழியோரம் வரும் கண்ணீர்த்துளிகளுடன்
உன் வருகைக்கு ஏங்கும் என் இதயத்துடிப்பு நின்றாலும்
பிரிந்து போன உந்தன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என்
கண்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது கனவாக
அல்ல கண்ணீராக ....
புன்னகை என்பது யாருக்கு வேண்டுமானாலும் உதிர்க்கலாம்
ஆனால் கண்ணீர்த்துளிகள் மனசுக்கு அருகில் உள்ளவர்களுக்கு
மட்டுமே உதிர்க்க முடியும் ...
உன் அன்பிற்காக இன்று நானும் ...!!!!!!!!
என் மரணத்திற்காக இனி வரும் நாட்களில் நீயும் .....!!!!!!!!!
 
உன் வருகைக்கு ஏங்கும் என் இதயத்துடிப்பு நின்றாலும்
பிரிந்து போன உந்தன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என்
கண்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது கனவாக
அல்ல கண்ணீராக ....
புன்னகை என்பது யாருக்கு வேண்டுமானாலும் உதிர்க்கலாம்
ஆனால் கண்ணீர்த்துளிகள் மனசுக்கு அருகில் உள்ளவர்களுக்கு
மட்டுமே உதிர்க்க முடியும் ...
உன் அன்பிற்காக இன்று நானும் ...!!!!!!!!
என் மரணத்திற்காக இனி வரும் நாட்களில் நீயும் .....!!!!!!!!!
Sunday, 10 June 2012
இது தான் உன் காதலா ?
உன் இதயத்தில் எனக்கு மட்டுமே இடம் என்று நினைத்தேன்
ஆனால் இன்று அவ்விடம் இன்னொருத்திக்கு
சொந்தமானதென்று உணர்ந்தேன் ...
உன் வாய் சொல்லும் பொய் உன் கண்களில் கண்டு
உன் பொய் காதலை உணர்ந்தேன் ...
அகமெல்லாம் பொய் பூசி என்னை காதல் கொண்டாய்
இத்தனை நாள் உன் அருகாமையில் உணராத ஒன்றை
முதல் முதலாய் உணர்ந்தேன்.....
இனிமையாக பேசும் உனது வார்த்தைகளை கேட்டு அன்று மயங்கிக்கிடைந்தேன் ....
நீ கூறிய உன் வார்த்தைக்கு அர்த்தம் இன்று உணர்ந்தேன்......
நீ காமத்தின் பசியில் இருந்ததை தாமதமாய் உணர்ந்தேன் .......
அந்த நிமிடம் வந்த கண்ணீரோடு காதலை கரைத்தேன் ......
Wednesday, 6 June 2012
என் உண்மையும்.... உன் பொய்யும் ....
உண்மையாக காதலித்தது உன் தவறா ?
                            இல்லை 
காதலித்தது போல் நடித்தது உன் தவறா ?
நீ பேசிய நிமிடங்கள் என் வாழ்வில் மறவா
                          நினைவுகள் ...
உன்னுடன் வாழ்ந்த அந்த காலங்கள் மனதில் 
                    பதிந்த சித்திரங்கள் ...
நீ பேசிய நிமிடங்கள் பொய் என்று தெரிந்தும் 
                     மனம் மகிழுதடா..!
வாழ்ந்த காலங்கள் பொய் என்று தெரிந்ததும் 
                    சித்திரங்கள் சிதறுதடா ..!
     "உனக்கென்ன பாவம் நான் செய்தேன் "
 நீ சொன்னததர்கெல்லாம் தலையாட்டியதா ?
       உன்னை உண்மையாக நேசித்ததா ?
          என்னை உனக்கு கொடுத்ததா ?
            பதில் சொல் என்னவனே ..!
உணவு வந்தபிறகு பசி போனதோ உனக்கு ?!
 மௌனத்தால் என் நெஞ்சை வதைக்காதே .!
            பிரிவால் என்னை சிதைக்காதே.!
                  ஏதோ ஒரு வேகம் ..........
                  ஏதோ ஒரு மோகம் ............
கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் கண்முன்னே ...!
        நீ வலி தந்து போனதால் உன் நினைவாலே 
                    நான் விழி மூடி சாவேனடா ...!!
என் அன்னையே .!!!
உன்னால்தான் நான் நானாக .... 
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் ... 
எனக்கு நீ இல்லாமல் போயிருந்தால் ....
நான் ஆறடி நிலம் தேடி போயிருப்பேன் ..
என் கனவுகளை நிஜமக்கியவள் நீ ...
என் கண்ணீரை துடைத்தவள் நீ ...
எனக்கு முதல் சிரிப்பை கற்றுக்கொடுத்தவள் நீ
உயிரை தந்து உயிரை கொடுத்தவளும் நீயே .!
நான் அறிவிழந்து நின்றபொழுது  நல்வழிகாட்டியதும் நீ ...
நேசம் ..பாசம் ...அன்பு ...காதல் ..வாழ்க்கை .. 
இத்தனைக்கும் அர்த்தங்களை .... 
அன்போடு சொல்லிக்கொடுத்தவளும் நீயேதான்...
சுற்றயுள்ள சொந்தங்களை புரிந்து கொண்டது உன்னால் தான் ....
என்னை சுற்றி வந்த துன்பங்களை தூக்கி எறிந்ததும் உன்னால் தான் ...
ஜென்மங்கள் உண்மையானால்.......
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல.... 
பிறக்கும் ஜென்மங்கள் யாவிலும் ........
நீயே என் தாயாக வரவேண்டும் ....
Tuesday, 29 May 2012
இணைந்திருப்பேன் என்றும் உன்னுடன் ...
- உலகில் உயர்ந்த உறவுகளில்
 
 சிறந்தது நட்பு ..
 
 என்றும் புனிதமானது
 
 தான் நட்பு ...
 எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ ...
 நட்பு என்னும் தோட்டத்தில் ராஜா நீ ...
 நீ நடக்கும் தூரமெல்லம் நானும்
 
 வருவேன்
 நிழலாக அல்ல உன் நண்பியாக ...
 தந்தையின் அன்பு உன்னிடம் கண்டேன் ..
 என் இடர் கண்டு உன் இதயம்
 
 துடிக்கக்கண்டேன் ...
 வாழ்கை என்கிற பெருங்கடலை கடந்திட
 நீ ஒரு துடுப்பாய் இருக்கிறாய் ..
 தோல்வி காண்கையில் தோள் குடுத்து
 தூண் போன்று நிற்கின்றாய் ...
 என் பாதையில் இருட்டென்று
 
 தெரிந்தால்...
 இரவிலும் வெளிச்சம் வரும் உன்னால் ...
 பிறக்கும் பொழுது நண்பன் என்று
 
 யாருமில்லை எனக்கு...
 இறக்கும் பொழுது நண்பனை தவிர
 
 யாருமில்லை என்ற நிலை எனக்கு ..
 என் வெற்றி என் கண்ணீர் என என்
 
 அத்தனை நிகழ்வுகளிலும் என்னுடன்
 
 எனக்காய் எனதாய் இருக்கும் ஒரு உறவு
 
 நீயே ...
 
Thursday, 24 May 2012
இன்ப களிப்பினிலே......
கண்களுக்கு "இன்பம்" நீ கனவில் வரும்பொழுது ...
"பேரின்பம்" வார்த்தையால் உன்னுடன் பேசும்பொழுது ...
தினம் வரும் கனவுகளில் 
உன் நினைவால் முழ்கி கிடைந்தேன் ......
கனவில் மட்டும் வரும் நீ 
நேரில் வரமாட்டாயா என்று நினைத்தேன் .....
உன்னை பற்றி சிந்திக்கும் பொழுது சோகமும் எனக்கு சுகம் தான் ..
நீ என்னருகில் இல்லாவிடில் வெற்றியும் எனக்கு வீண் தான் ...
மானே தேனே நீயேதானே என்று பாடும் நாள் வராதோ 
உன்னை என் தோளில் சுமக்கும் நாள் வராதோ 
இறைவன் எனக்கொரு வரம் தரமாட்டானா என்றிருந்தேன் ..
இன்றோ நீ பிறந்தாய் உயிர் போகும் வலி கூட அமைதியாக ஏற்றுக்கொண்டேன் ..
முதல் குழந்தையின் முதல் உதை இன்பமும் துன்பமும் ஒரேழுத்து 
தான் என்று ஏற்றுக்கொண்டேன் ..
உன் முகம் பார்த்ததும் இன்பக்களிப்பினிலே மூழ்கி
சொர்கத்தை கண்டேன் .... 
Thursday, 17 May 2012
மனம்..!
மனிதனின் மனம் ஒரு காகிதம் போல அதில்
கவிதை எழுதும் கைகளை விட கசக்கி எறியும் கைகளே அதிகம்.
நிலை இல்லா உலகில் நியமில்லா மனித குணமும்
மனமும் மாறுகின்றது...
மூச்சு விட்டுக்கொண்டு இருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..
முயற்சி செய்துகொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் ..
உயிரில்லாதவன் மனிதனில்லை...
உருவம் இருப்பவன் இறைவனில்லை...
இரண்டுமே இல்லையேல் இவ்வுலகமில்லை ...!!!
Monday, 14 May 2012
காதல்..!
அன்று
ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் ..........
இன்று
ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில்
காமத்தை கலக்கிறார்கள் ..........
வாழ்வில் ஆட்சி கொண்டவர்கள் காதல் கொள்கிறார்கள்........
காட்சி கொண்டவர்கள் காமம் கொண்டு காதலின் கற்பைக் கொள்கிறார்கள் .
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று.
அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை.
அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாததே ...!!
காதல் என்பது மறு உலகம் அதில் கடுகளவே காமம் ..!!
காதலும் காமமும் ! உள்ளத்தின் துணை இன்றி போனால் இரண்டிலும் மோதலே !
காதல் -- இரு உயிரின் நெருக்கம்.!!!
காமம் -- இரு உடலின் நெருக்கம்.!!
காதலில் அல்ல காமத்தில் தான் எங்கெல்லாம் காதல் புகுகிறதோ அங்கெல்லாம் வெல்வது காமம் மட்டும்தான் காதல் அல்ல ...
இந்த கால காதலில் காமம் மட்டுமே இருக்கிறது ! ஒரு பூவில் தேனை குடித்துவிட்டு மற்றொரு பூவை தேடுகிறது ! வண்டு ...!!!!
Tuesday, 8 May 2012
வருவாயா? என்னவனே....!!?
வெகு தூரத்தில்...
நினைவோடும்.!
வெகு அருகில்...
நிழலோடும்.!
எங்கிருக்கிறாய் என்னவனே.!
எனக்குள் என் உயிராய்
இருக்கும் என்னவனே... !
வெட்ட வெட்ட துளிர்விடும்
மரமாய் என்னை மாற்றிவிட்டாய்!!.
நீ என்னை விட்டு விலக ... விலக ...,
என் காதல் வளர்கிறது!!!
உனக்கான என் கனவுகளுடன்
விழித்துக் கொண்டிருக்கேன் ....
இறுதி வரை உனக்கு பாத
பூஜை செய்ய காத்திருக்கேன் ......
வருவாயா? என்னவனே....!!?
என்னவனே உந்தன் சேதி சொல்லாதோ!
உன்னை எண்ணி இருக்கின்ற கன்னி முகம் பார்க்க கரைதாண்டி வரமாட்டாயா??
Tuesday, 1 May 2012
என்னவனே...!!
என் சிந்தனையின் சொந்தக்காரன் அவன்.
என் கற்பனையின் முகவரி அவன்.
என்றும் என் கவிதையின் முதல் வரி அவன்.
முகவரி தந்தவனே என் முகம் மறந்ததென்ன.
என்னை சிந்திக்க வைத்தவனே என்னை பற்றி
சிந்திக்க மறந்ததென்ன.
முதல் வரி நீ இன்றி முழுமை பெறுமோ என் கவி.
என் இதயம் இயங்கவில்லை இனியவனே நீ இன்றி ..!!வந்து விடு ..!!!
என்னவனே...!!
வாழ்வின் எல்லை வரை நீ வேண்டும்....
Monday, 30 April 2012
Thursday, 26 April 2012
பெண் மனம்........!
பெண்ணின் மனம் எளிதில் பலருக்கு புரிவதில்லை........
ஆசைகளும் வேட்க்கைகளும் பிறருக்காய்
முடமாக்கப்பட்டு இதயத்தின் ஓரத்தில் கிடக்கின்றது...
சமுதாய கோட்பாடுகளில் சிக்கி
தனக்கே ஒரு முள்வேலி அமைத்து வாழ
பழகிகொண்டது...
விண்ணோடு முட்டும் அளவு கொண்ட
வேட்கை எல்லாம் குடும்பத்திற்கென மறைத்துவைக்க பழகி கொண்டது...
இருந்தும் பெண் மனம் கல்லென்று தான்
சொல்லும் கல்நெஞ்சக்காரர்களால் பெண் மனம் நொந்துகொண்டுதான் இருக்கிறது....
ஆசைகளும் வேட்க்கைகளும் பிறருக்காய்
முடமாக்கப்பட்டு இதயத்தின் ஓரத்தில் கிடக்கின்றது...
சமுதாய கோட்பாடுகளில் சிக்கி
தனக்கே ஒரு முள்வேலி அமைத்து வாழ
பழகிகொண்டது...
விண்ணோடு முட்டும் அளவு கொண்ட
வேட்கை எல்லாம் குடும்பத்திற்கென மறைத்துவைக்க பழகி கொண்டது...
இருந்தும் பெண் மனம் கல்லென்று தான்
சொல்லும் கல்நெஞ்சக்காரர்களால் பெண் மனம் நொந்துகொண்டுதான் இருக்கிறது....
வாய்ப்பு .....!!
வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது ,
கிடைய்த்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியது கிடையாது , 
வாய்ப்பு ஒரு முறைதான் வரும் ...!!
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த கற்றுக்கொள் ,
ஒரு முறை வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக்கொள் ,
தவறிப்போன வாய்புக்கள் கடந்து போன நிமிடங்கள் ..!!
இனிவரும் வாய்புக்கள் உனக்கான காலங்கள் ..!!
Tuesday, 24 April 2012
Monday, 23 April 2012
யோசிக்க நினைக்க வில்லை ........
நிஜ காதலே பிரியும் உலகில்
விதயாசமாய் ஒரு காதல் என்னில்
நேரில் காணமல் கருப்ப சிவப்பா தெரியாமல்
ஊர்பேரை அறியாமல் விரும்ப தொடங்கி விட்டேன்
அவனின் மனதை பறி கொடுத்து விட்டேன்
முடிவு என்னாகும் என கவலை
இருவர் மனதிலும் துளியும் இல்லை
நேசம் ஒன்று போதுமென நாங்கள்
முடிவெடுத்தோம்
வெறும் பேச்சில் மட்டுமே தினம் தினம்
காதலித்தோம்
காதல் கொள்ள காரணம் அவன் குழந்தை மனம்
என் நலனில் அவனின் அக்கறை கொள்ளும்
விதமும்
தானாய் பிடித்து போக கனவினை
தொடர்ந்துவிட்டேன் ................
யாரும் நேசிக்காத ஒரு காதலை
நேசிபதால் இல்லை என் கவலை
என்னாகுமோ எனும் கவலை
ஏன் நான் அதை யோசிக்க நினைக்க வில்லை ........
விதயாசமாய் ஒரு காதல் என்னில்
நேரில் காணமல் கருப்ப சிவப்பா தெரியாமல்
ஊர்பேரை அறியாமல் விரும்ப தொடங்கி விட்டேன்
அவனின் மனதை பறி கொடுத்து விட்டேன்
முடிவு என்னாகும் என கவலை
இருவர் மனதிலும் துளியும் இல்லை
நேசம் ஒன்று போதுமென நாங்கள்
முடிவெடுத்தோம்
வெறும் பேச்சில் மட்டுமே தினம் தினம்
காதலித்தோம்
காதல் கொள்ள காரணம் அவன் குழந்தை மனம்
என் நலனில் அவனின் அக்கறை கொள்ளும்
விதமும்
தானாய் பிடித்து போக கனவினை
தொடர்ந்துவிட்டேன் ................
யாரும் நேசிக்காத ஒரு காதலை
நேசிபதால் இல்லை என் கவலை
என்னாகுமோ எனும் கவலை
ஏன் நான் அதை யோசிக்க நினைக்க வில்லை ........
பெண்ணின் மனவேதனை ...........!!!
என் தாய் பெருமையாகச் சொன்னால்,
"என் மகளுக்கு அழவே தெரியாது!"
இன்று
நான் சொல்கிறேன்,
"எனக்கு அழுவதைத் தவிர
வேறு எதுவும் தெரியாது!"
நீ என்னைப் பிரிந்ததால்
இதயத்தைக்
கல்லாக்கிக் கொண்டேன்..
ஆனாலும்,
அதில் நீ இருந்தாய்,
சிற்பமாக...
காதலித்த நாட்களே
வாழ்க்கையின்
மிக அழகான
பக்கங்கள் பலருக்கு...
ஆனால்,
அந்த பக்கங்களைக் கிழித்து,
கசக்கி எறிவதே பழக்கம்
காலத்திற்கு..
உன் நிழலாக,
என்றும் உன்னுடன் இருப்பேன் என்றேன்..
பைத்தியக்காரி நான்..
இருட்டினுள் நீ சென்றால்,
நிழல்
எப்படி உடனிருக்கும்?
"தோழியா இல்லைக் காதலியா?" என்றாய்,
இரண்டும் இல்லை,
"உன் மனைவியடா நான்!" என்றேன்..
அப்படியானால்,
இந்த பிரிவின் பெயர்,
காதல் தோல்வி அல்ல..
விவாகரத்து!
ஆம்,
இருவருக்குமே
சற்றும் உடன்பாடின்றி,
காலத்தின் கட்டளையால் ஏற்பட்ட
விவாகரத்து!!
"காட்சிப் பிழையோ?
தோற்ற மயக்கமோ??"
கவிபாட நான்
பாரதி இல்லை..
கல்லறை கட்ட
ஷா ஜகானும் இல்லை..
உன் பிரிவை எண்ணி,
அழுவதா,
உயிரை விடுவதா
என அறியாத
பேதைப் பெண்!
வாழ்வுக்கும்
சாவுக்கும்
இடையில் நடக்கும்
போராட்டம்...
"வாழ்க்கையே ஒரு
நாடக மேடை" கூறினர் அறிஞர்..
காதல் நாடகம்
இனிதே அரங்கேறியது.
முடிந்தும் போனது!
அடுத்தப் பிறவி நாடகத்திலும் நாம்
இணைய வேண்டுகிறேன்...
பிரிவில்லா நாடகமானால் மட்டும்
கூப்பிடு என்னை...
மீண்டும்
உன் பிரிவைத்
தாங்க மாட்டேன் நான்!
மறுபிறவி இருந்தால்
சந்திப்போம்!
இந்த பிறவியின் நிலை என்ன?
இந்த பிரிவிலிருந்து
விடுதலை வேண்டும்!
மீண்டும் இணைவோமா?
மதில் மேல் பூனையாக
என் காதல்!
உயிருடன் நான் இன்றும் உன்னால்......
உன் முகம் காண முடியாமல் நான் தொலைவிலே இருந்தாலும்
உன் புகைப்படத்தில் உன்னையும் உன் அன்பையும் முழுமையாய்
அறிகிறேன்.
யாருக்கும் தெரியவில்லை நான் உனக்குள்
காதல் வயப்பட்டு கலந்து கொண்டிருக்கிறேன் என்று
நிலாவையும் ரசிக்கிறேன் நான் ரசிக்கும் நிலா உன் கண்களிலும்
தென்படும் என்ற நம்பிக்கையில்
உன்னை முத்தமிட என் உதடுகள் ஏங்குகிறது
உன் கரம் பிடிக்க என் கரங்கள் ஏங்குகிறது
அந்த நாளுக்காக உன் வரவை எதிர் பார்த்து
உயிருடன் நான்
இன்றும் உன்னால்....................
இப்படிக்கு...................உன்னவள்
Subscribe to:
Comments (Atom)

 







.jpg)









2.jpg)


























 
 
 
 
 
 
 
 
 
