உண்மையாக காதலித்தது உன் தவறா ?
                            இல்லை 
காதலித்தது போல் நடித்தது உன் தவறா ?
நீ பேசிய நிமிடங்கள் என் வாழ்வில் மறவா
                          நினைவுகள் ...
உன்னுடன் வாழ்ந்த அந்த காலங்கள் மனதில் 
                    பதிந்த சித்திரங்கள் ...
நீ பேசிய நிமிடங்கள் பொய் என்று தெரிந்தும் 
                     மனம் மகிழுதடா..!
வாழ்ந்த காலங்கள் பொய் என்று தெரிந்ததும் 
                    சித்திரங்கள் சிதறுதடா ..!
     "உனக்கென்ன பாவம் நான் செய்தேன் "
 நீ சொன்னததர்கெல்லாம் தலையாட்டியதா ?
       உன்னை உண்மையாக நேசித்ததா ?
          என்னை உனக்கு கொடுத்ததா ?
            பதில் சொல் என்னவனே ..!
உணவு வந்தபிறகு பசி போனதோ உனக்கு ?!
 மௌனத்தால் என் நெஞ்சை வதைக்காதே .!
            பிரிவால் என்னை சிதைக்காதே.!
                  ஏதோ ஒரு வேகம் ..........
                  ஏதோ ஒரு மோகம் ............
கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் கண்முன்னே ...!
        நீ வலி தந்து போனதால் உன் நினைவாலே 
                    நான் விழி மூடி சாவேனடா ...!!

 


 
 
 
 
 
 
 
 
 
