Ads 468x60px

..

Monday 30 April 2012

வாழ்க தொழிலாளர் தினம்...!!


உழைக்கும் உலகத்தமிழ் நண்பர்கள்அனைவருக்கும் "மே" தின வாழ்த்துக்கள்..உழைப்பாளியின் பெருமை திறமையை 
எடுத்துரைக்கும் நாள் மே ஒன்று 
வாழ்க தொழிலாளர் தினம்...!!

Thursday 26 April 2012

நீ மௌனமாய் இருந்தாலும்
உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...!!!


பெண் மனம்........! 

பெண்ணின் மனம் எளிதில் பலருக்கு புரிவதில்லை........

ஆசைகளும் வேட்க்கைகளும் பிறருக்காய்
முடமாக்கப்பட்டு இதயத்தின் ஓரத்தில் கிடக்கின்றது...

சமுதாய கோட்பாடுகளில் சிக்கி
தனக்கே ஒரு முள்வேலி அமைத்து வாழ
பழகிகொண்டது...

விண்ணோடு முட்டும் அளவு கொண்ட
வேட்கை எல்லாம் குடும்பத்திற்கென மறைத்துவைக்க பழகி கொண்டது...

இருந்தும் பெண் மனம் கல்லென்று தான்
சொல்லும் கல்நெஞ்சக்காரர்களால் பெண் மனம் நொந்துகொண்டுதான் இருக்கிறது....

அவன் மடி ....



சொல்லில் அடங்காத சொர்க்கம் அவன் மடி.
தலை சாய்ந்து விழி மூடி,
தன்னிலை மறந்து ,
அங்கே புதைந்து 
கிடக்க வேண்டும் 
இறுதிவரை...

மன வலி ........



உன்னைப் போல் காதலை மறுக்க என்னாலும் முடியும்...

இருந்தும் மறுக்க முடியவில்லை... !! ??

உன் மனம் வலிக்கும் என்பதால்...!!

கண்ணீரை அல்ல....!


என்கண்ணில காணவேண்டும்
என்றென்றும் அழகான நம்
காதலை...கண்ணீரை அல்ல....!


மகிழ்ச்சியான நேரத்திற்கு
காத்திருப்பதை விட
இந்த நேரத்தை சந்தொஷமாக்கு ....!
சுமையாக இருக்கும் நேரம் கூட
சுகமாக மாறும் .....!

அவன் நினைவுகள் .........!!



பைத்தியமாக நான்
ஆனாலும் எனக்கு
வைத்தியமாக
அவன் நினைவு மட்டுமே
இருக்க முடியும் ..!!

வாய்ப்பு .....!!


வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது ,
கிடைய்த்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியது கிடையாது , 
வாய்ப்பு ஒரு முறைதான் வரும் ...!!
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த கற்றுக்கொள் ,
ஒரு முறை வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக்கொள் ,
தவறிப்போன வாய்புக்கள் கடந்து போன நிமிடங்கள் ..!!
இனிவரும் வாய்புக்கள் உனக்கான காலங்கள் ..!!

Tuesday 24 April 2012

எழுத்துகளின் பிறப்பு .......!



என் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் .......
எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை .....

பத்து நிமிடங்கள் என் எழுத்துக்களை அன்பு உள்ளங்கள் .....
நீங்கள் படித்தால் போதும் ........

புரிந்து கொண்டேன் இன்று ..!!



நிம்மதி தேடி இந்த பூலோகத்தில் கண்ணீருடன் அலைந்தேன் 
நான் என் வாழ்வில் கண்டதில்லை நிம்மதி ...
நிம்மதி எங்கே என்று தேடித்தேடி 
கடைசியில் உன் நினைவுகளே எனக்கு நிம்மதி அளித்தது நினைவில் நீ இருந்தால் என் நிழலும் கூட நிம்மதியை உறங்கும் ..
என்று புரிந்து கொண்டேன் இன்று ..!!


Monday 23 April 2012

நேரம் ......!!



நேரம் காட்டும் 
கருவிகள் எதுவும் 
எனக்கு பிடிக்கவில்லை 
அவன் என்னுடன் 
இருக்கையில்!!!!!! 

அந்த அரை நொடி ................


என் வாழ்வில் நீ பார்க்கும் 
அந்த அரை நொடி 
என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான 
நொடிகளாய் மாறுகின்றன என் உயீர் காதலனே ...!!!

யோசிக்க நினைக்க வில்லை ........


நிஜ காதலே பிரியும் உலகில்
விதயாசமாய் ஒரு காதல் என்னில்
நேரில் காணமல் கருப்ப சிவப்பா தெரியாமல்
ஊர்பேரை அறியாமல் விரும்ப தொடங்கி விட்டேன்
அவனின் மனதை பறி கொடுத்து விட்டேன்
முடிவு என்னாகும் என கவலை
இருவர் மனதிலும் துளியும் இல்லை
நேசம் ஒன்று போதுமென நாங்கள்
முடிவெடுத்தோம்
வெறும் பேச்சில் மட்டுமே தினம் தினம்
காதலித்தோம்
காதல் கொள்ள காரணம் அவன் குழந்தை மனம்
என் நலனில் அவனின் அக்கறை கொள்ளும்
விதமும்
தானாய் பிடித்து போக கனவினை
தொடர்ந்துவிட்டேன் ................
யாரும் நேசிக்காத ஒரு காதலை
நேசிபதால் இல்லை என் கவலை
என்னாகுமோ எனும் கவலை
ஏன் நான் அதை யோசிக்க நினைக்க வில்லை ........

பெண்ணின் மனவேதனை ...........!!!



அன்று
என் தாய் பெருமையாகச் சொன்னால்,
"என் மகளுக்கு அழவே தெரியாது!"
இன்று
நான் சொல்கிறேன்,
"எனக்கு அழுவதைத் தவிர
வேறு எதுவும் தெரியாது!"

நீ என்னைப் பிரிந்ததால்
இதயத்தைக்
கல்லாக்கிக் கொண்டேன்..
ஆனாலும்,
அதில் நீ இருந்தாய்,
சிற்பமாக...

காதலித்த நாட்களே
வாழ்க்கையின்
மிக அழகான
பக்கங்கள் பலருக்கு...
ஆனால்,
அந்த பக்கங்களைக் கிழித்து,
கசக்கி எறிவதே பழக்கம்
காலத்திற்கு..

உன் நிழலாக,
என்றும் உன்னுடன் இருப்பேன் என்றேன்..
பைத்தியக்காரி நான்..
இருட்டினுள் நீ சென்றால்,
நிழல்
எப்படி உடனிருக்கும்?

"தோழியா இல்லைக் காதலியா?" என்றாய்,
இரண்டும் இல்லை,
"உன் மனைவியடா நான்!" என்றேன்..
அப்படியானால்,
இந்த பிரிவின் பெயர்,
காதல் தோல்வி அல்ல..

விவாகரத்து!

ஆம்,
இருவருக்குமே
சற்றும் உடன்பாடின்றி,
காலத்தின் கட்டளையால் ஏற்பட்ட

விவாகரத்து!!

"காட்சிப் பிழையோ?
தோற்ற மயக்கமோ??"
கவிபாட நான்
பாரதி இல்லை..
கல்லறை கட்ட
ஷா ஜகானும் இல்லை..
உன் பிரிவை எண்ணி,
அழுவதா,
உயிரை விடுவதா
என அறியாத
பேதைப் பெண்!

வாழ்வுக்கும்
சாவுக்கும்
இடையில் நடக்கும்
போராட்டம்...

"வாழ்க்கையே ஒரு
நாடக மேடை" கூறினர் அறிஞர்..
காதல் நாடகம்
இனிதே அரங்கேறியது.
முடிந்தும் போனது!

அடுத்தப் பிறவி நாடகத்திலும் நாம்
இணைய வேண்டுகிறேன்...
பிரிவில்லா நாடகமானால் மட்டும்
கூப்பிடு என்னை...

மீண்டும்
உன் பிரிவைத்
தாங்க மாட்டேன் நான்!
மறுபிறவி இருந்தால்

சந்திப்போம்!

இந்த பிறவியின் நிலை என்ன?
இந்த பிரிவிலிருந்து
விடுதலை வேண்டும்!


மீண்டும் இணைவோமா?
மதில் மேல் பூனையாக
என் காதல்!

உயிருடன் நான் இன்றும் உன்னால்......


உன் முகம் காண முடியாமல் நான் தொலைவிலே இருந்தாலும்
உன் புகைப்படத்தில் உன்னையும் உன் அன்பையும் முழுமையாய்
அறிகிறேன்.
யாருக்கும் தெரியவில்லை நான் உனக்குள்
காதல் வயப்பட்டு கலந்து கொண்டிருக்கிறேன் என்று
நிலாவையும் ரசிக்கிறேன் நான் ரசிக்கும் நிலா உன் கண்களிலும்
தென்படும் என்ற நம்பிக்கையில்
உன்னை முத்தமிட என் உதடுகள் ஏங்குகிறது
உன் கரம் பிடிக்க என் கரங்கள் ஏங்குகிறது
அந்த நாளுக்காக உன் வரவை எதிர் பார்த்து
உயிருடன் நான்
இன்றும் உன்னால்....................

இப்படிக்கு...................உன்னவள்

எதார்த்தம் அறிவோம்!


வாழ்க்கை உறங்கிக்கொண்டிருக்கிறது.
மரணம் விழித்துக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்கும் மத்தியில்
மனிதன் கற்பனையில்
நடமாடிக்கொண்டிருக்கிறான்!!!!!

இருட்டு ............


கண்களை மூடினால் 
நம் பார்வையில் இருட்டு... 
கண்களைத் திறந்தால் 
அனைவரது பார்வையிலுமே இருட்டு !!

காதல் ..!

மெழுகே....


மெழுகே....
அழுவதை
நிறுத்து.
யாருக்கும்
தெரியாமல்
இருட்டில்
நான்
அழுக...........

நிம்மதி !!!


நிம்மதி இருந்தால் 
நிமிடம் கூட வீணாகாது 
நிம்மதி இல்லாவிட்டால் 
நிமிடம் என்ன வாழ்நாளே வீணாகி விடும்


  

மனசாட்சி

கடவளுக்கும்
மரணத்திற்கும்
மனிதர்களுக்கும்
பயந்து வாழ்வதைவிட
மனசாட்சிக்கு பயந்து வாழ்
மரணமே உன்னை
நெருங்க அஞ்சும்...!!!