Ads 468x60px

..

Tuesday 26 June 2012

அன்புள்ள அன்னையே..


உன் புகழ் பாடிடுவேன் இங்கு நானம்மா
கடவுளின் ஆணைப்படி ( 14 .06 ) என் பிறந்தநாள்
அன்று நான் உன் கையில்...
வாழ்கை வாழ காரணமாக இருந்தவள்
இன்று நான் உயிரில் கலந்த என் உயிர் அன்னை உன் நெஞ்சில் ..
பிறந்தால் இறந்து விடுவேன் என்று தெரிந்தும் பிறந்தேன்
கடவுளை காண நினைத்து உன் கருவறையில் ...
என்னை கருவில் சுமந்த அன்னையே ...
எனக்கு சுவாசம் தந்த அன்னையே....
உன் அறியா வயதில் உன் முதற் பிள்ளையாய்
என்னைச் சுமந்து பெற்றாயே உன் வலி நானறிவேன் ..
உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்
காலமெல்லாம் காத்திடுவேன் உன்னை .
என் இதயத்தில் நிறைந்திருக்கின்ற உன்னை..
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் ....


நீயும் ...!!! நானும் !!!!


உனக்காய் காத்திருக்கேன் விழியோரம் வரும் கண்ணீர்த்துளிகளுடன்
உன் வருகைக்கு ஏங்கும் என் இதயத்துடிப்பு நின்றாலும்
பிரிந்து போன உந்தன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என்
கண்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது கனவாக
அல்ல கண்ணீராக ....
புன்னகை என்பது யாருக்கு வேண்டுமானாலும் உதிர்க்கலாம்
ஆனால் கண்ணீர்த்துளிகள் மனசுக்கு அருகில் உள்ளவர்களுக்கு
மட்டுமே உதிர்க்க முடியும் ...
உன் அன்பிற்காக இன்று நானும் ...!!!!!!!!
என் மரணத்திற்காக இனி வரும் நாட்களில் நீயும் .....!!!!!!!!!