Ads 468x60px

..

Saturday 28 July 2012

வெறுக்க நினைத்ததில்லை .............!!




என் இதயம் வலிக்க எழுதிய ஒரு கவிதை
அதை நீ இமைதிரந்து பார்க்கவுமில்லை
உன் சுவாசம் தேடி வந்த என் இதயத்தை
நீ வரவேர்க்கவுமில்லை
பூவாக இருக்கும் என் பாசம் உன்னை
தேடி வரும் பொழுது நம்பி ஏற்றதுமில்லை
இருந்தும் உதிராத பூக்கள் போல் உன் நினைவுகளும்
என் மனதில் பூக்களாய் அல்ல மரமாய்
வளர்கிறது ...

கனவாகி போகுமோ என் வாழ்கை ....



என் இதயம் உன்னை தேடும் பொழுது
நீ என்னுடுடன் இல்லை
என் நினைவு உன்னை தேடும் பொழுது
மட்டும் என்ன்டுடன் இருக்கிறாய்
என் தூக்கம் உன் கனவோடு
என் பயணம் உன் நினைவோடு
என் கவிதை உன் கற்பனையோடு
கற்பனையில் உன்னுடன் அனுதினமும்
வாழ்வதால் நீ என்னுடன் இருந்த நேரங்கள்
யாவும் கற்பனையாகவே தோன்றுகிறது
கற்பனையில் வாழ்கின்ற என் வாழ்கை
கடைசிவரைக்கும் கனவாகி போகுமோ ....