Ads 468x60px

..

Tuesday 26 June 2012

அன்புள்ள அன்னையே..


உன் புகழ் பாடிடுவேன் இங்கு நானம்மா
கடவுளின் ஆணைப்படி ( 14 .06 ) என் பிறந்தநாள்
அன்று நான் உன் கையில்...
வாழ்கை வாழ காரணமாக இருந்தவள்
இன்று நான் உயிரில் கலந்த என் உயிர் அன்னை உன் நெஞ்சில் ..
பிறந்தால் இறந்து விடுவேன் என்று தெரிந்தும் பிறந்தேன்
கடவுளை காண நினைத்து உன் கருவறையில் ...
என்னை கருவில் சுமந்த அன்னையே ...
எனக்கு சுவாசம் தந்த அன்னையே....
உன் அறியா வயதில் உன் முதற் பிள்ளையாய்
என்னைச் சுமந்து பெற்றாயே உன் வலி நானறிவேன் ..
உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்
காலமெல்லாம் காத்திடுவேன் உன்னை .
என் இதயத்தில் நிறைந்திருக்கின்ற உன்னை..
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் ....


நீயும் ...!!! நானும் !!!!


உனக்காய் காத்திருக்கேன் விழியோரம் வரும் கண்ணீர்த்துளிகளுடன்
உன் வருகைக்கு ஏங்கும் என் இதயத்துடிப்பு நின்றாலும்
பிரிந்து போன உந்தன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என்
கண்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது கனவாக
அல்ல கண்ணீராக ....
புன்னகை என்பது யாருக்கு வேண்டுமானாலும் உதிர்க்கலாம்
ஆனால் கண்ணீர்த்துளிகள் மனசுக்கு அருகில் உள்ளவர்களுக்கு
மட்டுமே உதிர்க்க முடியும் ...
உன் அன்பிற்காக இன்று நானும் ...!!!!!!!!
என் மரணத்திற்காக இனி வரும் நாட்களில் நீயும் .....!!!!!!!!!
 

Sunday 10 June 2012

இது தான் உன் காதலா ?



உன் இதயத்தில் எனக்கு மட்டுமே இடம் என்று நினைத்தேன்
ஆனால் இன்று அவ்விடம் இன்னொருத்திக்கு
சொந்தமானதென்று உணர்ந்தேன் ...
உன் வாய் சொல்லும் பொய் உன் கண்களில் கண்டு
உன் பொய் காதலை உணர்ந்தேன் ...
அகமெல்லாம் பொய் பூசி என்னை காதல் கொண்டாய்
இத்தனை நாள் உன் அருகாமையில் உணராத ஒன்றை
முதல் முதலாய் உணர்ந்தேன்.....
இனிமையாக பேசும் உனது வார்த்தைகளை கேட்டு அன்று மயங்கிக்கிடைந்தேன் ....
நீ கூறிய உன் வார்த்தைக்கு அர்த்தம் இன்று உணர்ந்தேன்......
நீ காமத்தின் பசியில் இருந்ததை தாமதமாய் உணர்ந்தேன் .......
அந்த நிமிடம் வந்த கண்ணீரோடு காதலை கரைத்தேன் ......



Wednesday 6 June 2012

என் உண்மையும்.... உன் பொய்யும் ....



உண்மையாக காதலித்தது உன் தவறா ?
                            இல்லை 
காதலித்தது போல் நடித்தது உன் தவறா ?

நீ பேசிய நிமிடங்கள் என் வாழ்வில் மறவா
                          நினைவுகள் ...
உன்னுடன் வாழ்ந்த அந்த காலங்கள் மனதில் 
                    பதிந்த சித்திரங்கள் ...

நீ பேசிய நிமிடங்கள் பொய் என்று தெரிந்தும் 
                     மனம் மகிழுதடா..!
வாழ்ந்த காலங்கள் பொய் என்று தெரிந்ததும் 
                    சித்திரங்கள் சிதறுதடா ..!

     "உனக்கென்ன பாவம் நான் செய்தேன் "

 நீ சொன்னததர்கெல்லாம் தலையாட்டியதா ?
       உன்னை உண்மையாக நேசித்ததா ?
          என்னை உனக்கு கொடுத்ததா ?

            பதில் சொல் என்னவனே ..!
உணவு வந்தபிறகு பசி போனதோ உனக்கு ?!

 மௌனத்தால் என் நெஞ்சை வதைக்காதே .!
            பிரிவால் என்னை சிதைக்காதே.!

                  ஏதோ ஒரு வேகம் ..........
                  ஏதோ ஒரு மோகம் ............

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் கண்முன்னே ...!

        நீ வலி தந்து போனதால் உன் நினைவாலே 
                    நான் விழி மூடி சாவேனடா ...!!

என் அன்னையே .!!!



உன்னால்தான் நான் நானாக .... 
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் ... 
எனக்கு நீ இல்லாமல் போயிருந்தால் ....
நான் ஆறடி நிலம் தேடி போயிருப்பேன் ..

என் கனவுகளை நிஜமக்கியவள் நீ ...
என் கண்ணீரை துடைத்தவள் நீ ...
எனக்கு முதல் சிரிப்பை கற்றுக்கொடுத்தவள் நீ
உயிரை தந்து உயிரை கொடுத்தவளும் நீயே .!

நான் அறிவிழந்து நின்றபொழுது  நல்வழிகாட்டியதும் நீ ...
நேசம் ..பாசம் ...அன்பு ...காதல் ..வாழ்க்கை .. 
இத்தனைக்கும் அர்த்தங்களை .... 
அன்போடு சொல்லிக்கொடுத்தவளும் நீயேதான்...

சுற்றயுள்ள சொந்தங்களை புரிந்து கொண்டது உன்னால் தான் ....
என்னை சுற்றி வந்த துன்பங்களை தூக்கி எறிந்ததும் உன்னால் தான் ...

ஜென்மங்கள் உண்மையானால்.......
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல.... 
பிறக்கும் ஜென்மங்கள் யாவிலும் ........
நீயே என் தாயாக வரவேண்டும் ....