Ads 468x60px

..

Wednesday 6 June 2012

என் அன்னையே .!!!



உன்னால்தான் நான் நானாக .... 
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் ... 
எனக்கு நீ இல்லாமல் போயிருந்தால் ....
நான் ஆறடி நிலம் தேடி போயிருப்பேன் ..

என் கனவுகளை நிஜமக்கியவள் நீ ...
என் கண்ணீரை துடைத்தவள் நீ ...
எனக்கு முதல் சிரிப்பை கற்றுக்கொடுத்தவள் நீ
உயிரை தந்து உயிரை கொடுத்தவளும் நீயே .!

நான் அறிவிழந்து நின்றபொழுது  நல்வழிகாட்டியதும் நீ ...
நேசம் ..பாசம் ...அன்பு ...காதல் ..வாழ்க்கை .. 
இத்தனைக்கும் அர்த்தங்களை .... 
அன்போடு சொல்லிக்கொடுத்தவளும் நீயேதான்...

சுற்றயுள்ள சொந்தங்களை புரிந்து கொண்டது உன்னால் தான் ....
என்னை சுற்றி வந்த துன்பங்களை தூக்கி எறிந்ததும் உன்னால் தான் ...

ஜென்மங்கள் உண்மையானால்.......
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல.... 
பிறக்கும் ஜென்மங்கள் யாவிலும் ........
நீயே என் தாயாக வரவேண்டும் ....