Ads 468x60px

..

Friday 19 July 2013






                       !...ஸ்வரங்கள்..!






               வஞ்சம் கொண்டோர்போல 
          என் மேல் வன்மம் கொண்டாயோ..?
 நானோ உன்னை கம்பிகளுக்குள் சிறைப்பட்ட 
            ஸ்வரங்கள் போல் உணர்கிறேன்..
     சப்தமில்லா ஸ்வரங்கள் என்று தெரிந்தும்
              உன்னுள் சப்தத்தை தேடுகிறேன்..
       எண்ணிலடங்கா ஸ்வரங்களை கேட்டும் 
          புது ஸ்வரங்கள் உன்னில் கேட்கிறேன்..
          ஸ்வரங்களும்,ராகங்களும் சேர்த்து 
                  உன்னில் காண்கிறேன்..
                            மொத்ததில் 
              மௌனத்தில் மயக்கும் சங்கீதம் 
                       உன்னில் கண்டேன்..
                               அதை கேட்ட 
                  குயில்களும்,குருவிகளும் 
         கூனிக்குறுகி தோற்றுப்போகின்றன...