Ads 468x60px

..

Monday 29 July 2013

                 பயண அரைமணிநேரம்...!!!


              என் செல்கைக்கு நேரம் ஆனபின்னும்
                      செல்லாமல் தினமும் அடுத்த
                   பேருந்திற்காக காத்திருக்கேன்
 காரணமின்றி உன்னோடு சேர்ந்து பயணிக்க..
        பேருந்தில் எத்தனை பேர் இருந்தாலும்
 ஏனோ என்னுள் உன் மூச்சுக்காற்றை மட்டும்
              நான் சுவாசிப்பது போன்ற உணர்வு..
            காரணமின்றி உன்னை பார்கிறேன்..
   காரணமின்றி உன்னோடு பேச விரும்புகிறேன்
காரணமின்றி சேர்ந்து பயணிக்க ஆசைப்படுகிறேன்..
காரணமின்றி நீ அமர்ந்திருக்கும் இடப்பக்கம் நானும்
                     அமர ஆசைப்படுகிறேனே..
              நான் ஜன்னல் ஓரம் வலப்பக்கத்தில்
              அமர்ந்திருந்தும் கவனம் சிதறாமல்
                     என் பார்வை நீ அமர்ந்திருக்கும்
               இடப்பக்கமே பார்க்கின்றனவே..
 பயணிக்கும் இந்த 30 நிமிடம் சிறு மனதுக்குள்ளே
ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
                          நான் எப்படி சமாளிப்பேன்
                       இந்த அரை மணி நேரத்தை ?

Thursday 25 July 2013

                                     நினைவுகள்...



                                                    சுட்டெரிக்கும் சில நாட்கள்
                                                               வெறுமையான
                                                                 பல இரவுகள்
                                                       இவைகளுக்கிடையில்
                                                             சில பல நாட்கள்
                                               மழை தூரலாய் உன் நினைவுகள்...

Friday 19 July 2013






                       !...ஸ்வரங்கள்..!






               வஞ்சம் கொண்டோர்போல 
          என் மேல் வன்மம் கொண்டாயோ..?
 நானோ உன்னை கம்பிகளுக்குள் சிறைப்பட்ட 
            ஸ்வரங்கள் போல் உணர்கிறேன்..
     சப்தமில்லா ஸ்வரங்கள் என்று தெரிந்தும்
              உன்னுள் சப்தத்தை தேடுகிறேன்..
       எண்ணிலடங்கா ஸ்வரங்களை கேட்டும் 
          புது ஸ்வரங்கள் உன்னில் கேட்கிறேன்..
          ஸ்வரங்களும்,ராகங்களும் சேர்த்து 
                  உன்னில் காண்கிறேன்..
                            மொத்ததில் 
              மௌனத்தில் மயக்கும் சங்கீதம் 
                       உன்னில் கண்டேன்..
                               அதை கேட்ட 
                  குயில்களும்,குருவிகளும் 
         கூனிக்குறுகி தோற்றுப்போகின்றன...









Monday 8 July 2013

மடல் படித்தேன்..!




காற்றோடு கலந்த காதலை
காற்றாலையை தூதுவிட்ட
உன் அன்பை சுவாசித்த மறு நொடி
அக்காற்றோடு என் அன்பையும்
கலந்து முகம் கானா உன்னை
முத்தமிட்டு மார்போடு அணைக்க
தவிப்போடு வருகிறேன்..