Ads 468x60px

..

Thursday 26 April 2012

நீ மௌனமாய் இருந்தாலும்
உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...!!!


பெண் மனம்........! 

பெண்ணின் மனம் எளிதில் பலருக்கு புரிவதில்லை........

ஆசைகளும் வேட்க்கைகளும் பிறருக்காய்
முடமாக்கப்பட்டு இதயத்தின் ஓரத்தில் கிடக்கின்றது...

சமுதாய கோட்பாடுகளில் சிக்கி
தனக்கே ஒரு முள்வேலி அமைத்து வாழ
பழகிகொண்டது...

விண்ணோடு முட்டும் அளவு கொண்ட
வேட்கை எல்லாம் குடும்பத்திற்கென மறைத்துவைக்க பழகி கொண்டது...

இருந்தும் பெண் மனம் கல்லென்று தான்
சொல்லும் கல்நெஞ்சக்காரர்களால் பெண் மனம் நொந்துகொண்டுதான் இருக்கிறது....

அவன் மடி ....



சொல்லில் அடங்காத சொர்க்கம் அவன் மடி.
தலை சாய்ந்து விழி மூடி,
தன்னிலை மறந்து ,
அங்கே புதைந்து 
கிடக்க வேண்டும் 
இறுதிவரை...

மன வலி ........



உன்னைப் போல் காதலை மறுக்க என்னாலும் முடியும்...

இருந்தும் மறுக்க முடியவில்லை... !! ??

உன் மனம் வலிக்கும் என்பதால்...!!

கண்ணீரை அல்ல....!


என்கண்ணில காணவேண்டும்
என்றென்றும் அழகான நம்
காதலை...கண்ணீரை அல்ல....!


மகிழ்ச்சியான நேரத்திற்கு
காத்திருப்பதை விட
இந்த நேரத்தை சந்தொஷமாக்கு ....!
சுமையாக இருக்கும் நேரம் கூட
சுகமாக மாறும் .....!

அவன் நினைவுகள் .........!!



பைத்தியமாக நான்
ஆனாலும் எனக்கு
வைத்தியமாக
அவன் நினைவு மட்டுமே
இருக்க முடியும் ..!!

வாய்ப்பு .....!!


வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது ,
கிடைய்த்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியது கிடையாது , 
வாய்ப்பு ஒரு முறைதான் வரும் ...!!
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த கற்றுக்கொள் ,
ஒரு முறை வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக்கொள் ,
தவறிப்போன வாய்புக்கள் கடந்து போன நிமிடங்கள் ..!!
இனிவரும் வாய்புக்கள் உனக்கான காலங்கள் ..!!