Ads 468x60px

..

Saturday 4 May 2013

சிசுவை கொல்வது சரிதானா ?

************************************



தாய்மை என்பது ஒவ்வொரு
பெண்ணுக்கும் ஏற்படும்
ஓர் அற்புதமான அனுபவம்.
இதை உனரா சிலர் சிசுவை
அழிப்பது சரியா ?

தன் தாயானவள்
தன்னை அன்பால் அனைப்பால்
கன்னத்தில் முத்தமிடுவாள்
எனக் காத்திருந்த சிசுவின்
ஆசை நிராகரிப்பது சரியா ?

எத்தனையோ குற்றவாளிகள்
இப்பூமியில் இருக்க
செய்யாத குற்றத்திற்கு
பூமிக்குவரா சிசுவிற்கு
தண்டனை எதற்கு ?

சில நிமிட ஆசைக்கு
காதல் என்ற பெயரில்
ரகசிய கருவில் உருவான
பச்சிளம் பூக்களை நாளைய
வீரர்களை கவிஞர்களை

கள்ளிப்பால் கொடுத்தும்
வித விதமான கலர் கலரான
மாத்திரைகள் உண்டும்
கலைக்கப்படுவது சரியா ?
கலைக்கப்படுவது நியாயமா ?

கருக்கலைப்பே கூடாது
அது ஓர் உயிர் பாவம்
எத்தனையோ பேர்
குழந்தை வரம் கிடைக்காமல்
குழந்தை தொட்டில் மட்டுமே
பார்த்து அழுதுகொண்டும்

பார்பவர்கள் எல்லாம் ஏதேனும்
விசேஷம் உண்டா என்று
கேட்கும் பொழுது
பதில் சொல்ல முடியாமல்
தவிக்கும் அப்பெண்ணின்
மனம் நீ அறிவாயா ??????



என் வாழ்க்கை பயணம்....!!




வார்த்தைகள் இல்லாமல் 
பேசிக்கொண்டிருகின்றேன்..
கண்கள் இல்லாமல் 
ரசித்துக்கொண்டிருக்கின்றேன்..
சுவாசம் இல்லாமல் 
சுவாசித்துக்கொண்டிருக்கின்றேன்..

வாழ்வில் எண்ணில் அடங்கா 
சிறு சிறு ஆசைகளை எண்ணி எண்ணி 
மண்ணில் புதைத்தும் விட்டேன்...
இரக்கமில்லாமல் மனதை குத்தி 
செல்லும் மனிதர்களின் மனம் அறிந்து 
மனம் உடைந்தும் போனேன்...

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்ற ஓராயிரம் உறவுகள்
பற்றி சிந்திக்கும் வேளையில் பயண உறவுகள் 
மறைந்து போவதும் தெரிந்துகொண்டேன்...

ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு பாதையில் 
எப்பாதை எனக்குரியது என்று "தடு"மாறி 
"தடம்"மாறி எங்கு பயணிக்கின்றேன் 
என்று தெரியாமல் என் பயணம் தொடர்கிறது....