Ads 468x60px

..

Friday 31 May 2013

    பசி

*************


பசி....
ஒவ்வொரு மனிதனின்
சக்திக்கான தேடல்..

உணவு தேடலை ஆரம்பிக்கும் 
போது மனிதன் செயல்ப்பாட்டில் 
பல மாற்றங்கள்..

பிடித்த உணவு ,
சத்தான உணவு ,
ஆடம்பர உணவு , 

பல உணவுகளில் 
ஒரு உணவுக்கான 
தேர்வு...

இந்த தேர்வு 
பணமுள்ளவனிடம் 
மட்டும் சாத்தியமாகும் ..

ஒரு வேளை உணவிற்குத்
தவமிருப்பவர்களின்
வாழ்க்கையோ ??? 

கேள்விக்குறியாக...!

பசி பட்டினியால் 
அவல சாவை 
தழுவிக்கொள்ளும் மக்கள் 

உலகின் ஒரு மூலையில் 
இன்றும் வாழ்ந்துகொண்டு 
தான் இருக்கிறார்கள் ..

பசிப்பிணி என்ற பாவி 
பிடித்துகொண்டு 
வாழ்வின் வேரருக்கின்றது...

உன்ன உணவின்றி மறித்து 
போகும் இந்த உன்னத வரம் 
அழிந்து போகட்டும்...

இன்றைய சூழ்நிலையில் 
மனிதர்களே மனித இனத்தை 
காக்கவேண்டும் ...

நம் மனித இனத்துக்கு 
உயிர்த்துளி வழங்குவோம் 
மாற்றலாம் உலகத்தை...

--------------------------------------------------------------------------------