Ads 468x60px

..

Monday 16 September 2013


உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல்



உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல்
உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது...
மறக்க நினைக்கும் தருணங்களும்
மறந்து நினைக்கும் நினைவுகளும்
மனதினில் ஊசலாடும் ஊஞ்சலானது...

நான் செய்யாததை செய்ததாய் நினைக்கிறாயே
இதன் பேர் தான் சந்தேகமா ?
பேசாததை பேசினேன் என்றாயே இதுதான்
என்மீதான உன் நம்பிக்கையா ?
உன் வெறுப்பு என்னை கொல்லுதே
என் மௌனமொழி புரியவில்லையா உனக்கு ?

என்னுள் வந்து அமர்ந்துப்பார்
என் எண்ணங்களில் மூழ்கிப்பார்
நினைவுகளை ருசித்துப்பார்
என் நிலைப்புரியும் உனக்கு...

நீ பேசாத இந்த நாட்களில்
வெறுமையை காண்கிறேன்
கடிகாரத்தின் முள் நகர்வதில்லை
வானில் நீலமில்லை
வானவில்லில் நிறமில்லை
குயிலோடு ராகமில்லை
பூக்களில் வாசமில்லை
கடலில் அலைகளில்லை
மண்ணில் ஈரமில்லை
காற்றில் அமைதி இல்லை
நிலவில் வெளிச்சமில்லை

நெஞ்ஜோடு நீ இருப்பது போல்
நிஜத்தில் என்னுடனில்லை
இத்தனை இல்லைகளுக்கு நடுவிலும்
என்னுயிர் துடிக்கின்றது..

இன்னும் நீளமாகவே
எழுத்து கண்ணீர் வடிக்க
தோன்றுகிறது ஆதலால்
நேற்றைய நாளின் மீதியிலும்
இன்றைய  நாளின் பாதியிலும்
முழுதாக மூழ்கி தொடர்வேன்
உனக்கான என்
கண்ணீரையும்..... கவியையும்......