Ads 468x60px

..

Monday 16 September 2013


உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல்



உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல்
உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது...
மறக்க நினைக்கும் தருணங்களும்
மறந்து நினைக்கும் நினைவுகளும்
மனதினில் ஊசலாடும் ஊஞ்சலானது...

நான் செய்யாததை செய்ததாய் நினைக்கிறாயே
இதன் பேர் தான் சந்தேகமா ?
பேசாததை பேசினேன் என்றாயே இதுதான்
என்மீதான உன் நம்பிக்கையா ?
உன் வெறுப்பு என்னை கொல்லுதே
என் மௌனமொழி புரியவில்லையா உனக்கு ?

என்னுள் வந்து அமர்ந்துப்பார்
என் எண்ணங்களில் மூழ்கிப்பார்
நினைவுகளை ருசித்துப்பார்
என் நிலைப்புரியும் உனக்கு...

நீ பேசாத இந்த நாட்களில்
வெறுமையை காண்கிறேன்
கடிகாரத்தின் முள் நகர்வதில்லை
வானில் நீலமில்லை
வானவில்லில் நிறமில்லை
குயிலோடு ராகமில்லை
பூக்களில் வாசமில்லை
கடலில் அலைகளில்லை
மண்ணில் ஈரமில்லை
காற்றில் அமைதி இல்லை
நிலவில் வெளிச்சமில்லை

நெஞ்ஜோடு நீ இருப்பது போல்
நிஜத்தில் என்னுடனில்லை
இத்தனை இல்லைகளுக்கு நடுவிலும்
என்னுயிர் துடிக்கின்றது..

இன்னும் நீளமாகவே
எழுத்து கண்ணீர் வடிக்க
தோன்றுகிறது ஆதலால்
நேற்றைய நாளின் மீதியிலும்
இன்றைய  நாளின் பாதியிலும்
முழுதாக மூழ்கி தொடர்வேன்
உனக்கான என்
கண்ணீரையும்..... கவியையும்......

Tuesday 10 September 2013

                                            புரியாமல் வந்த நேசமென்பதாலோ
                                              என்னவோ என் நிலைமைப்புரிய
                                                   உன் நினைவுகள் என்னை
                                                        விட்டு பிரிவதில்லை.. 

                                                         நீ என்னை மெய்யாக
                                           காதலிக்கவில்லை என்றாலென்ன
                                   என் காதல் உண்மை என்று புரியவைக்கவே
                                உனக்கான என் எழுத்துக்களை தொடர்கிறேன்
                                         என் காதலை சுவாசிக்க வேண்டாம்
                                                              வாசிப்பாயா ??

Monday 2 September 2013




                                                   உனை எதிர்பார்த்து ஏங்கி
                                                         கண்ணீரை சுமந்திருக்கும்
                                                  என் கண்களுக்கு என்ன
                                                       சொல்லி புரிய வைப்பேன்
                                                அது சுமக்கும் கண்ணீரே
                                                               நீதானென்று..!

நேற்று நடைபெற்ற பதிவர் சந்திப்பில்..  


இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது போட்டோக்களின் க்ளிக் க்ளிக் என்ற சப்தத்தோடு சந்தோஷங்கள் மழை சாரல் போல் அள்ளிதெளித்தது..

எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில் எதுவுமே அறியாத தெரியாத சும்மா பதிவர்ன்னு பெயரைவத்துக்கொண்டு ஏதேதோ
கிறுக்கித்தள்ளும் என்னை (  மிதிக்காமல் ) மதித்து அழைத்த
தென்றல் சசி அக்காவிற்கு  நன்றி..