Ads 468x60px

..

Sunday 29 July 2012

ரமலான் என்னும் விருந்தாளி ...!!!!!




வருடத்தில் ஒரு முறை நம்மை தேடி வரும் விருந்தாளி ....!
நம்மை நேர் வழிக்கு கொண்டு செல்ல வந்த விருந்தாளி ....!
விருந்தாளி என்னும் ரமலான் மாதம் வந்ததும் 
சொர்கத்தின் வாசல் திறக்கப்படும் ....!
நரகத்தின் வாசல் மூடப்படும்....! 
ஷைத்தான்கள் விலகப்படும்.....! 
ரமலான் மாதம்  ஒவ்வொரு இரவிலும் 
பகலிலும் நரகத்தில் உள்ளவர்களுக்கு 
விடுதலை அளிக்கப்படும் ...!
இத்தகைய விருந்தாளி நம்மை தேடி வரும் ரமலானை 
அன்போடும் மகிழ்வோடும் வரவேற்போம்....!!! 
அல்லாஹ்வின் வழிமுறைப்படி நோம்பு நோற்று 
எல்லாம் வல்ல இறைவனின் அருளினை பெறுவோம் ..!!!!

Saturday 28 July 2012

வெறுக்க நினைத்ததில்லை .............!!




என் இதயம் வலிக்க எழுதிய ஒரு கவிதை
அதை நீ இமைதிரந்து பார்க்கவுமில்லை
உன் சுவாசம் தேடி வந்த என் இதயத்தை
நீ வரவேர்க்கவுமில்லை
பூவாக இருக்கும் என் பாசம் உன்னை
தேடி வரும் பொழுது நம்பி ஏற்றதுமில்லை
இருந்தும் உதிராத பூக்கள் போல் உன் நினைவுகளும்
என் மனதில் பூக்களாய் அல்ல மரமாய்
வளர்கிறது ...

கனவாகி போகுமோ என் வாழ்கை ....



என் இதயம் உன்னை தேடும் பொழுது
நீ என்னுடுடன் இல்லை
என் நினைவு உன்னை தேடும் பொழுது
மட்டும் என்ன்டுடன் இருக்கிறாய்
என் தூக்கம் உன் கனவோடு
என் பயணம் உன் நினைவோடு
என் கவிதை உன் கற்பனையோடு
கற்பனையில் உன்னுடன் அனுதினமும்
வாழ்வதால் நீ என்னுடன் இருந்த நேரங்கள்
யாவும் கற்பனையாகவே தோன்றுகிறது
கற்பனையில் வாழ்கின்ற என் வாழ்கை
கடைசிவரைக்கும் கனவாகி போகுமோ ....