- உலகில் உயர்ந்த உறவுகளில்
 
 சிறந்தது நட்பு ..
 
 என்றும் புனிதமானது
 
 தான் நட்பு ...
 எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ ...
 நட்பு என்னும் தோட்டத்தில் ராஜா நீ ...
 நீ நடக்கும் தூரமெல்லம் நானும்
 
 வருவேன்
 நிழலாக அல்ல உன் நண்பியாக ...
 தந்தையின் அன்பு உன்னிடம் கண்டேன் ..
 என் இடர் கண்டு உன் இதயம்
 
 துடிக்கக்கண்டேன் ...
 வாழ்கை என்கிற பெருங்கடலை கடந்திட
 நீ ஒரு துடுப்பாய் இருக்கிறாய் ..
 தோல்வி காண்கையில் தோள் குடுத்து
 தூண் போன்று நிற்கின்றாய் ...
 என் பாதையில் இருட்டென்று
 
 தெரிந்தால்...
 இரவிலும் வெளிச்சம் வரும் உன்னால் ...
 பிறக்கும் பொழுது நண்பன் என்று
 
 யாருமில்லை எனக்கு...
 இறக்கும் பொழுது நண்பனை தவிர
 
 யாருமில்லை என்ற நிலை எனக்கு ..
 என் வெற்றி என் கண்ணீர் என என்
 
 அத்தனை நிகழ்வுகளிலும் என்னுடன்
 
 எனக்காய் எனதாய் இருக்கும் ஒரு உறவு
 
 நீயே ...
 
Tuesday, 29 May 2012
இணைந்திருப்பேன் என்றும் உன்னுடன் ...
Thursday, 24 May 2012
இன்ப களிப்பினிலே......
கண்களுக்கு "இன்பம்" நீ கனவில் வரும்பொழுது ...
"பேரின்பம்" வார்த்தையால் உன்னுடன் பேசும்பொழுது ...
தினம் வரும் கனவுகளில் 
உன் நினைவால் முழ்கி கிடைந்தேன் ......
கனவில் மட்டும் வரும் நீ 
நேரில் வரமாட்டாயா என்று நினைத்தேன் .....
உன்னை பற்றி சிந்திக்கும் பொழுது சோகமும் எனக்கு சுகம் தான் ..
நீ என்னருகில் இல்லாவிடில் வெற்றியும் எனக்கு வீண் தான் ...
மானே தேனே நீயேதானே என்று பாடும் நாள் வராதோ 
உன்னை என் தோளில் சுமக்கும் நாள் வராதோ 
இறைவன் எனக்கொரு வரம் தரமாட்டானா என்றிருந்தேன் ..
இன்றோ நீ பிறந்தாய் உயிர் போகும் வலி கூட அமைதியாக ஏற்றுக்கொண்டேன் ..
முதல் குழந்தையின் முதல் உதை இன்பமும் துன்பமும் ஒரேழுத்து 
தான் என்று ஏற்றுக்கொண்டேன் ..
உன் முகம் பார்த்ததும் இன்பக்களிப்பினிலே மூழ்கி
சொர்கத்தை கண்டேன் .... 
Thursday, 17 May 2012
மனம்..!
மனிதனின் மனம் ஒரு காகிதம் போல அதில்
கவிதை எழுதும் கைகளை விட கசக்கி எறியும் கைகளே அதிகம்.
நிலை இல்லா உலகில் நியமில்லா மனித குணமும்
மனமும் மாறுகின்றது...
மூச்சு விட்டுக்கொண்டு இருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..
முயற்சி செய்துகொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் ..
உயிரில்லாதவன் மனிதனில்லை...
உருவம் இருப்பவன் இறைவனில்லை...
இரண்டுமே இல்லையேல் இவ்வுலகமில்லை ...!!!
Monday, 14 May 2012
காதல்..!
அன்று
ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் ..........
இன்று
ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில்
காமத்தை கலக்கிறார்கள் ..........
வாழ்வில் ஆட்சி கொண்டவர்கள் காதல் கொள்கிறார்கள்........
காட்சி கொண்டவர்கள் காமம் கொண்டு காதலின் கற்பைக் கொள்கிறார்கள் .
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று.
அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை.
அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாததே ...!!
காதல் என்பது மறு உலகம் அதில் கடுகளவே காமம் ..!!
காதலும் காமமும் ! உள்ளத்தின் துணை இன்றி போனால் இரண்டிலும் மோதலே !
காதல் -- இரு உயிரின் நெருக்கம்.!!!
காமம் -- இரு உடலின் நெருக்கம்.!!
காதலில் அல்ல காமத்தில் தான் எங்கெல்லாம் காதல் புகுகிறதோ அங்கெல்லாம் வெல்வது காமம் மட்டும்தான் காதல் அல்ல ...
இந்த கால காதலில் காமம் மட்டுமே இருக்கிறது ! ஒரு பூவில் தேனை குடித்துவிட்டு மற்றொரு பூவை தேடுகிறது ! வண்டு ...!!!!
Tuesday, 8 May 2012
வருவாயா? என்னவனே....!!?
வெகு தூரத்தில்...
நினைவோடும்.!
வெகு அருகில்...
நிழலோடும்.!
எங்கிருக்கிறாய் என்னவனே.!
எனக்குள் என் உயிராய்
இருக்கும் என்னவனே... !
வெட்ட வெட்ட துளிர்விடும்
மரமாய் என்னை மாற்றிவிட்டாய்!!.
நீ என்னை விட்டு விலக ... விலக ...,
என் காதல் வளர்கிறது!!!
உனக்கான என் கனவுகளுடன்
விழித்துக் கொண்டிருக்கேன் ....
இறுதி வரை உனக்கு பாத
பூஜை செய்ய காத்திருக்கேன் ......
வருவாயா? என்னவனே....!!?
என்னவனே உந்தன் சேதி சொல்லாதோ!
உன்னை எண்ணி இருக்கின்ற கன்னி முகம் பார்க்க கரைதாண்டி வரமாட்டாயா??
Tuesday, 1 May 2012
என்னவனே...!!
என் சிந்தனையின் சொந்தக்காரன் அவன்.
என் கற்பனையின் முகவரி அவன்.
என்றும் என் கவிதையின் முதல் வரி அவன்.
முகவரி தந்தவனே என் முகம் மறந்ததென்ன.
என்னை சிந்திக்க வைத்தவனே என்னை பற்றி
சிந்திக்க மறந்ததென்ன.
முதல் வரி நீ இன்றி முழுமை பெறுமோ என் கவி.
என் இதயம் இயங்கவில்லை இனியவனே நீ இன்றி ..!!வந்து விடு ..!!!
என்னவனே...!!
வாழ்வின் எல்லை வரை நீ வேண்டும்....
Subscribe to:
Comments (Atom)

 
2.jpg)








 
 
 
 
 
 
 
 
 
