வெகு தூரத்தில்...
நினைவோடும்.!
வெகு அருகில்...
நிழலோடும்.!
எங்கிருக்கிறாய் என்னவனே.!
எனக்குள் என் உயிராய்
இருக்கும் என்னவனே... !
வெட்ட வெட்ட துளிர்விடும்
மரமாய் என்னை மாற்றிவிட்டாய்!!.
நீ என்னை விட்டு விலக ... விலக ...,
என் காதல் வளர்கிறது!!!
உனக்கான என் கனவுகளுடன்
விழித்துக் கொண்டிருக்கேன் ....
இறுதி வரை உனக்கு பாத
பூஜை செய்ய காத்திருக்கேன் ......
வருவாயா? என்னவனே....!!?
என்னவனே உந்தன் சேதி சொல்லாதோ!
உன்னை எண்ணி இருக்கின்ற கன்னி முகம் பார்க்க கரைதாண்டி வரமாட்டாயா??